இந்தியன் திரைப்படம் கிட்டத்தட்ட நாம் எல்லோரும் பார்த்திருப்போம். அரசு அலுவலகங்களில் நிலவும் லஞ்சத்தையும் மெத்தனப் போக்கையும் திரையில் பதிவு செய்ய எடுக்கப்பட்ட முயற்சிகளில் ஒன்று.
லஞ்சத்தின் பரவலைக் காட்டுவதற்காக இயக்குநர் எடுத்துக்கொண்ட களம் - வட்டாரப் போக்குவரத்து அலுவலகம். மிகச்சரியான தேர்வு.உங்களுக்கு "எட்டு" போடத் தெரியுமோ இல்லையோ, அரசு இயந்திரத்துக்கு நீங்கள் கட்டாயம் "துட்டு" போட்டாக வேண்டும். காற்றைப் போல கையூட்டு முழுமையும் பரவியிருக்கும் இடம் அது.
வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்குச் சற்றும் குறைவில்லாதவை நம்ம ஊர் தாசில்தார் அலுவலகங்கள். மற்ற இடங்களில் எல்லாம் மேசைக்கடியில் இருக்கும் லஞ்சம், இங்கு மட்டும் சர்வ சுதந்திரமாய் நாற்காலியில் அமர்ந்திருக்கும். கிராமங்களே இல்லாமல் ஆகிக் கொண்டிருக்கும் இந்தக் காலங்களில் கூட எந்த ஒரு சான்றிதழுக்கும், கிராம அலுவலரின் கையொப்பம் அவசியமாக இருக்கிறது. அதன்பின் வருவாய் அலுவலர், கடைசியில் தாசில்தாரிடம் வருகையில் குறைந்தபட்சம் இருநூறு ரூபாய்கள் "அழ" வேண்டியிருந்திருக்கும். பணம் வாங்குவது மட்டுமல்ல, அவர்களின் அதிகாரத் தோரணையும், நடந்து கொள்ளும் விதமும் முகம் சுழிக்க வைப்பன.
இவையெல்லாம் என் நேரடி அனுபவங்களே! சென்ற முறை இந்தியா சென்ற போது, புதிதாக வாங்கிய வீட்டிற்கு சில வேலைகளுக்காக தாசில்தார் அலுவலகம் செல்ல வேண்டியிருந்தது. அதிகபட்சம் அரைமணி நேரத்தில் முடிந்திருக்க வேண்டிய வேலைக்கு கிட்டத்தட்ட ஒரு முழுநாள் ஆகியது. லஞ்சத்தைத் தாண்டியும் என்னை மிகவும் காயப்படுத்திய விஷயம் இது. ஒரு கடைநிலை ஊழியர்கூட நான் கேட்ட கேள்விகளுக்கு சரியான பதிலளிக்கவில்லை. ஒவ்வொருவருக்கும், ஆதிசேஷன் பூமியைச் சுமப்பதைப் போலத் தான் மட்டுமே இந்த மொத்த அரசாங்கத்தையும் தலையில் சுமப்பதாக எண்ணம்.
இந்த "பேசா மடந்தைகளை"ப் பேசவைக்க ஒரு வழி பிறக்காதா? என அடிக்கடி நினைப்பதுண்டு. சென்ற மாதம் தினமலரில் படித்த செய்தி சந்தோசத்தையும், ஆச்சரியத்தையும் ஒருசேரக் கொடுத்ததோடல்லாமல் நான் தேடிய வழி பிறந்ததையும் சொன்னது.
செய்தி இது தான்.
"கோவில்பட்டியில் ஒரு சமூக சேவகர், காவல்துறை உதவியுடன் தாசில்தார் அலுவலகக் கோப்புகளை ஆய்வு செய்திருக்கிறார். பணத்தைக் கண்டால் மட்டுமே வாயைத் திறக்கும் தாசில்தார் அலுவலக ஊழியர்கள் முதல்முறையாக ஒரு சாதாரணக் குடிமகனின் கேள்விகளுக்கு முக்கியமாக பணம் வாங்காமல் பதில் சொல்லியிருக்கிறார்கள்"
நினைத்துப் பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறது. எப்படி இது சாத்தியப்பட்டது ? அன்று அப்பர் சுவாமிகள் பதிகம் பாடி ஊமைகளைப் பேச வைத்தாரெனில், இன்று இவர்கள் பேசியது ஒரு சட்டத்தின் காரணமாக....
அதுவே "தகவல் பெறும் உரிமைச் சட்டம்"
வாக்குச்சீட்டினைப் போலவே, இந்தியக் குடிமகனுக்குக் கிடைத்திருக்கும் இன்னொரு வலிமையான ஆயுதமிது, அலாவுதீன் பூதத்தைப் போல நீங்கள் கேட்பவற்றையெல்லாம் (தகவல்கள் மட்டும் !!! ) தரக் கூடியது.
தகவல் உரிமை பெறும் சட்டமானது, 15.06.2005 அன்று குடியரசுத்தலைவரின் ஒப்புதலைப் பெற்று 22.10.2005 முதல் அமலாக்கப்பட்டது. நம் தமிழகத்தில் 1997ம் ஆண்டு மே மாதம் 4ம் தேதி முதலே இச்சட்டம் நடைமுறையிலிருந்தாலும், மத்திய அரசு மூலம் அக்டோபர் 2005 முதல் ஜம்மு காஷ்மீர் நீங்கலாக நாடு முழுதும் "கட்டாயமாக" நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இச்சட்டத்தின் நோக்கமே, அரசு அலுவலகங்கள் ஒவ்வொன்றின் செயல்திறனிலும் வெளிப்படையான நிலை, செயலாற்றுபவர்களிடையே பொறுப்புடைமையை மேம்படுத்துதல், அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களின் கட்டுப்பாட்டிலுள்ள தகவல்களை குடிமக்கள் ஒவ்வொருவரும் பெற்றுக் கொள்ள வழி செய்வதே ஆகும்.
இதன்மூலம் நாட்டின் பாதுகாப்பையும், இறையாண்மையையும் பாதிக்கும் விஷயங்களைத் தவிர அரசு சார்ந்த எந்தவொரு தகவலையும் நாம் கேட்டுப் பெற முடியும். இதற்கென மத்திய, மாநில, மாவட்ட அளவில் தகவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்தியிலும், மாநில அளவிலும் தகவல் ஆணையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. இந்தத் தகவல் ஆணையங்கள், தேர்தல் ஆணையங்களுக்கு இணையான அதிகாரம் கொண்டவை. தமிழகத் தகவல் ஆணையம், ஒரு தலைமை ஆணையரையும், நான்கு மாநில தகவல் ஆணையர்களையும் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கிறது.
தகவல் உரிமைச்சட்டம் பிரிவு 6ன்படி, நீங்கள் ஏதேனும் தகவல் பெற விரும்பினால் ஆங்கிலம் அல்லது தமிழில் எழுத்து வடிவிலோ, அல்லது மின்னணு வழியிலோ, உரிய அலுவலகத்திலுள்ள பொது தகவல் அல்லது உதவி பொது தகவல் அலுவலர்களிடத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதனுடன் இன்றைய கட்டணமாக ரூபாய் 10 மட்டும் பணமாகவோ, வரைவோலையாகவோ (DD) அந்த அலுவலகத்தில் செலுத்த வேண்டும். விண்ணப்பத்தில் நீங்கள் பெற விரும்பும் தகவலின் விவரங்களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும். நீங்கள் அத்தகவலைக் கோருவதற்கான காரணத்தைக் கேட்கும் உரிமை பொது தகவல் அலுவலர்க்குக் கிடையாது. நீங்கள் பெற விரும்பும் தகவல் இன்னொரு அரசு அலுவலகம் சார்ந்தது எனில், தகவல் அலுவலரே உங்களது விண்ணப்பத்தை உரிய இடத்திற்கு அனுப்பி வைப்பார். இது ஐந்து நாட்களுக்குள் செய்யப்படும்.
விண்ணப்பம் பெறப்பட்ட, 30 நாட்களுக்குள் பொது தகவல் அலுவலர் நீங்கள் பெற விரும்பிய தகவல்களை அளிப்பார். 30 நாட்களுக்குள் தகவல் தரப்படா விட்டால், மேல்முறையீடு செய்யலாம். இதற்குத் தனியாக கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. மாநிலத் தகவல் ஆணையத்திடம், முதல் மேல் முறையீடு 30 நாட்களுக்குள்ளும், இரண்டாம் முறையீடு முதல் முறையீட்டின் முடிவு எடுக்கப்பட்ட தேதியிலிருந்தோ அல்லது அந்த முடிவு பெறப்பட்ட தேதியிலிருந்தோ 90 நாட்களுக்குள்ளும் செய்ய உரிமை உண்டு. இச்சட்டப்பிரிவு 19 உட்பிரிவு (1) மற்றும் (2)ன் படி மேல் முறையீடு செய்யப்பட்டதிலிருந்து 30 நாட்களுக்குள் முடிவு தெரிவிக்கப்படும். பிரிவு 20ன் படி, பொது தகவல் அலுவலர், தகவலை அளிப்பதை எந்த முறையிலும் தடுப்பாரெனில், தகவல் அளிக்கப்படும் வரை ஒவ்வொரு நாளுக்கும் ரூ 250/- அபராதமாக, அந்த பொது தகவல் அலுவலர் மீது விதிக்கப்படும். எனினும், மொத்த அபராதத் தொகையானது ரூ. 25000/- க்கு மிகாமல் இருக்கும். மேலும் பொதுத் தகவல் அலுவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் ஆணையம் பரிந்துரைக்கும்.
நீங்கள் பெற விரும்பும் தகவல் நாட்டின் பாதுகாப்பு ரகசியங்கள் உட்பட தகவல் உரிமை சட்டம் பிரிவு 8 மற்றும் 9 களில் விலக்களிக்கப்பட்டிருக்கும் விஷயங்களைப் பற்றியெனில் உங்கள் விண்ணப்பம் தகுந்த காரணங்களை விளக்கி நிராகரிக்கப்படும். இவை தவிர அரசு ஆணை (GO) எண்கள் 1042, 1043, 1044, மற்றும் 1045 களின் படி, குற்றப்புலனாய்வுத்துறை, தனிப்பிரிவு, பாதுகாப்புப்பிரிவு உட்பட 30 அரசு அலுவலகங்களை, தகவல் உரிமைச் சட்டம் மூலமாக, தகவல் பெற அணுக முடியாது.
மக்களாட்சியில் அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களின் செயல்பாடுகளைப் பொதுமக்கள் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாகத் தெரிந்து கொள்ள வழி செய்யும் தகவல் உரிமைச் சட்டம் காலத்தின் கட்டாயமாகும்.
இச்சட்டம் பற்றி மேலும் அறிய, தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவல் கையேட்டினைப் படித்துப் பாருங்கள்.
தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் முகவரி:
தலைமை ஆணையர்,
தமிழ்நாடு தகவல் ஆணையம்,
எண் 375,
முதல் தளம்,
காமதேனு கூட்டுறவு சிறப்பு அங்காடி கட்டிடம் ,
தேனாம்பேட்டை,
அண்ணாசாலை ,
சென்னை- 18.
தொலைபேசி எண் 044-24357580
மத்திய தகவல் ஆணையத்தின் முகவரி:
மத்திய தகவல் ஆணையர்.
மத்திய தகவல் ஆணையம்,
ஆகஸ்ட் கிராந்திபவன்
2 வது தளம், பி-பிரிவு.
நியு பிகாஜி காமா பேலஸ்
டெல்லி-110056
தொலைபேசி எண்கள் 011-26717353, 26761137
எல்லாம் சரி, இப்பொழுது உங்கள் மனதில் நிழலாடும் சந்தேகங்கள் எனக்குப் புரிகிறது. அதெப்படி இத்தனை முக்கியமான சட்டத்தினை, நம்மை ஆளுபவர்கள் தாமாக முன்வந்து அமுல்படுத்தினார்கள் ? மக்களை வெறும் ஓட்டுப் போடும் இயந்திரங்களாக மட்டுமே பார்க்கும், அவர்களை அதே நிலையில் வைத்திருக்க விரும்பும் அரசியல்வாதிகளுக்கு இந்த யோசனை எப்படி வந்திருக்கும் ?
உங்கள் சந்தேகங்கள் மிகச் சரியானவையே. உங்களுக்குத் தெரியுமா? இன்று நடைமுறையில் இருக்கும் தகவல் உரிமைச் சட்டம் கிட்டத்தட்ட 15 ஆண்டுகால போராட்ட வரலாறு கொண்டது.
நிச்சயம் அடுத்த பதிவில் விரிவாக எழுதுகிறேன்.
தரக்குறிப்பு: ( References)
1. தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 வழிகாட்டி கையேடு. தமிழக பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்த துறை வெளியீடு.
Friday, May 16, 2008
Thursday, May 8, 2008
நளவெண்பா கதை
பெயர்க்காரணம்:
காலையில் எழுந்ததும் நினைக்கத் தகுந்தவர்களில் நளனும் ஒருவன் என்கிறார் வாரியார் சுவாமிகள். அத்தகைய சிறப்புமிக்க நளனது சரித்திரத்தைக் 'கேட்டார் பிணிக்கும் தகையவாய் கேளாறும் வேட்ப' க்கூறும் நூலாகையால் நளவெண்பா எனப் பெயர் பெற்றது.
கதைச்சுருக்கம்:
நிடத தேசத்து வேந்தனாகிய நளன் கல்வி கேள்விகளில், வீர தீரத்தில் தன்னிகரற்றவன். ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன். சமையல் கலையில் கைதேர்ந்தவன். இன்றைக்கும் கூட சிறந்த சமையலைப் பாராட்டும்போது நளபாகம் என்கிறோம்.
விதர்ப்ப தேசத்து இளவரசியாகிய மங்கை தமயந்தி அன்றலர்ந்த மலர் போல் அழகும் பொலிவும் கொண்டவள். நாணம், அச்சம், மடம், பயிர்ப்பு எனும் நால்வகை குணங்களையே, தேர், குதிரை, யானை, காலாள் எனும் நான்குவகை சேனைகளாகவும், மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்புலன்களையும், நல்வழி நடத்திச் செல்கின்ற அமைச்சர்களாகவும், காலில் அணிந்துள்ள சிலம்பே பேரிகையாகவும், வேற்படையும், வாள்படையுமே இரு கண்களாகக் கொண்டு பெண்மையினை ஆட்சி புரிகின்ற பெண்ணரசியாவாள்.
இத்தகைய சிறப்புமிக்க தமயந்தியின் குணநலன்களை அன்னத்தின் மூலம் கேட்டறிந்த நளன் அவள்பால் காதல் கொண்டான். தன் உள்ளக்கிடைக்கையை அன்னத்தின் வாயிலாக தமயந்திக்குத் தூதாக அனுப்பினான்.
அன்னம் நளனது ஆண்மைச்சிறப்பையும், ஆட்சித்திறமையையும், அறிவுக்கூர்மையையும், பண்பினையும் சொல்லக் கேட்ட கணம் முதலே, தமயந்தி தன் உயிரை அவனுக்கு உயில் எழுதினாள். உண்மைதான், அன்பெனும் பெருவெள்ளத்தின் முன் யார்தான் எதிர்த்து நிற்க முடியும் !!
இந்நிலையில், தமயந்தியின் சுயம்வரத்திற்கு அவளது தந்தை சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்தார். நளனுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. இந்திரன் முதலான தேவர்களும், இடர் செய்யும் கலியும், பல நாட்டு வேந்தர்களும் கூடியிருந்தும், தமயந்தி நளனுக்கே மாலையைச் சூட்டினாள்.
இதனால் கோபம் கொண்ட கலி, நளனுக்கும், தமயந்திக்கும் பல்வேறு துன்பங்களை விளைவித்து இருவரையும் தனியாக்கினான். காலம் முழுதும், நிரந்திரமாகச் சூரியனை மறைத்திடும் வலிமை மேகத்தின் கைகளுக்கு இல்லை அல்லவா ? எந்தப் பிழையும் செய்யாத குற்றமற்றவனான நளன் நீண்ட சோதனைகளுக்குப் பின், தமயந்தியுடன் இணைந்து நீண்ட காலம் நல்லாட்சி புரிந்தான்.
இதுவே நளவெண்பாவின் சாரம். நளனைப் பற்றி வேறு பல தமிழ் இலக்கியங்களிலும் குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. சிவமகாபுராணத்தில் நளனது முற்பிறப்பு பற்றிக் கூட விவரிக்கப்பட்டுள்ளதாக, வாரியார் சுவாமிகள் தனது "சிந்தனைச் செல்வம்" நூலில் குறிப்பிடுகிறார். இது இன்னொரு தனிப் பதிவிற்கான குறிப்பு. சிவமகாபுராணம் நூலைத் தேடிக் கொண்டிருக்கிறேன். கிடைத்ததும் நளனது முற்பிறப்பு பற்றிய கதையினைத் தனியே பதிவிடுகிறேன்.
நூல் அமைப்பு:
நளவெண்பா மூன்று காண்டங்களை உடையது.
சுயம்வர காண்டம் - இக்காண்டம் முழுமையும், காதலும், இன்பமும், அழகியலும் விரவிக் கிடக்கின்றன. நளனும், தமயந்தியும் காதல் வசப்படுவதும், சுயம்வரத்தின் மூலம் தமயந்தி நளனைத் தன் கணவனாகத் தேர்ந்தெடுப்பதும் மிகச் சுவையாக விவரிக்கப்பட்டுள்ளன. நிடத நாட்டு வளமும் விதர்ப்ப தேசத்துச் சிறப்பும் அழகான உவமைகள் மூலம் எடுத்துச் சொல்லப்பட்டிருக்கின்றன. இது 168 வெண்பாக்களைக் கொண்டது.
கலிதொடர் காண்டம் - சுயம்வரத்தில், தமயந்தியால் நிராகரிக்கப்பட்ட கலி, சினங்கொண்டு, நளனையும், தமயந்தியையும் சதியால் பிரித்து தொடர் துன்பங்கள் விளைவிப்பதை விவரிக்கும் காண்டமாகும். இது 147 வெண்பாக்களைக் கொண்டது.
கலிநீங்கு காண்டம் - கலியின் தொல்லைகள் நீங்கி, நளனும் தமயந்தியும் இல்லறம் திரும்புதலை விவரிக்கும் காண்டமாகும். இது 89 வெண்பாக்களைக் கொண்டது.
சகுனியின் சூழ்ச்சியால், நாடு, நகரம், அனைத்தையும் இழந்து காட்டில் இருந்த தருமரின், கவலையைப் போக்கி நம்பிக்கை அளிக்கும் விதமாக, வியாசர் அவருக்கு நளனது கதையைச் சொல்வது போல் நளவெண்பா இயற்றப்பட்டுள்ளது.
நூலாசிரியர் - புகழேந்திப் புலவர்.
தமிழ் இலக்கிய உலகில், கம்பனுக்கு நிகரான, புலமையும், கற்பனைச்செறிவும் கொண்டவர் புகழேந்திப் புலவர். வெண்பாக்கள் பாடுவதில் வல்லவர். "வெண்பாவுக்கோர் புகழேந்தி" எனப் போற்றப்பட்டவர். ஒட்டக்கூத்தரின் சமகாலத்தவர். சோழன் பாண்டியன் மகளை மணந்தபோது, அறிவு திருத்தும் நல்லாசிரியராக சோழநாட்டுக்கு வந்தவர். குலோத்துங்கச்சோழனது வேண்டுகோளுக்கிணங்க நளவெண்பாவைப் பாடினார்.
இனி வரும் பதிவுகளில் ஒவ்வொரு வெண்பாவின் பொருளையும், சிறப்பையும் ஆராய்வோம்.
குறிப்பு:
"மதுரைத் திட்ட" த்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள நளவெண்பா மின்நூலினை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்ட பதிவு.
காலையில் எழுந்ததும் நினைக்கத் தகுந்தவர்களில் நளனும் ஒருவன் என்கிறார் வாரியார் சுவாமிகள். அத்தகைய சிறப்புமிக்க நளனது சரித்திரத்தைக் 'கேட்டார் பிணிக்கும் தகையவாய் கேளாறும் வேட்ப' க்கூறும் நூலாகையால் நளவெண்பா எனப் பெயர் பெற்றது.
கதைச்சுருக்கம்:
நிடத தேசத்து வேந்தனாகிய நளன் கல்வி கேள்விகளில், வீர தீரத்தில் தன்னிகரற்றவன். ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன். சமையல் கலையில் கைதேர்ந்தவன். இன்றைக்கும் கூட சிறந்த சமையலைப் பாராட்டும்போது நளபாகம் என்கிறோம்.
விதர்ப்ப தேசத்து இளவரசியாகிய மங்கை தமயந்தி அன்றலர்ந்த மலர் போல் அழகும் பொலிவும் கொண்டவள். நாணம், அச்சம், மடம், பயிர்ப்பு எனும் நால்வகை குணங்களையே, தேர், குதிரை, யானை, காலாள் எனும் நான்குவகை சேனைகளாகவும், மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்புலன்களையும், நல்வழி நடத்திச் செல்கின்ற அமைச்சர்களாகவும், காலில் அணிந்துள்ள சிலம்பே பேரிகையாகவும், வேற்படையும், வாள்படையுமே இரு கண்களாகக் கொண்டு பெண்மையினை ஆட்சி புரிகின்ற பெண்ணரசியாவாள்.
இத்தகைய சிறப்புமிக்க தமயந்தியின் குணநலன்களை அன்னத்தின் மூலம் கேட்டறிந்த நளன் அவள்பால் காதல் கொண்டான். தன் உள்ளக்கிடைக்கையை அன்னத்தின் வாயிலாக தமயந்திக்குத் தூதாக அனுப்பினான்.
அன்னம் நளனது ஆண்மைச்சிறப்பையும், ஆட்சித்திறமையையும், அறிவுக்கூர்மையையும், பண்பினையும் சொல்லக் கேட்ட கணம் முதலே, தமயந்தி தன் உயிரை அவனுக்கு உயில் எழுதினாள். உண்மைதான், அன்பெனும் பெருவெள்ளத்தின் முன் யார்தான் எதிர்த்து நிற்க முடியும் !!
இந்நிலையில், தமயந்தியின் சுயம்வரத்திற்கு அவளது தந்தை சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்தார். நளனுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. இந்திரன் முதலான தேவர்களும், இடர் செய்யும் கலியும், பல நாட்டு வேந்தர்களும் கூடியிருந்தும், தமயந்தி நளனுக்கே மாலையைச் சூட்டினாள்.
இதனால் கோபம் கொண்ட கலி, நளனுக்கும், தமயந்திக்கும் பல்வேறு துன்பங்களை விளைவித்து இருவரையும் தனியாக்கினான். காலம் முழுதும், நிரந்திரமாகச் சூரியனை மறைத்திடும் வலிமை மேகத்தின் கைகளுக்கு இல்லை அல்லவா ? எந்தப் பிழையும் செய்யாத குற்றமற்றவனான நளன் நீண்ட சோதனைகளுக்குப் பின், தமயந்தியுடன் இணைந்து நீண்ட காலம் நல்லாட்சி புரிந்தான்.
இதுவே நளவெண்பாவின் சாரம். நளனைப் பற்றி வேறு பல தமிழ் இலக்கியங்களிலும் குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. சிவமகாபுராணத்தில் நளனது முற்பிறப்பு பற்றிக் கூட விவரிக்கப்பட்டுள்ளதாக, வாரியார் சுவாமிகள் தனது "சிந்தனைச் செல்வம்" நூலில் குறிப்பிடுகிறார். இது இன்னொரு தனிப் பதிவிற்கான குறிப்பு. சிவமகாபுராணம் நூலைத் தேடிக் கொண்டிருக்கிறேன். கிடைத்ததும் நளனது முற்பிறப்பு பற்றிய கதையினைத் தனியே பதிவிடுகிறேன்.
நூல் அமைப்பு:
நளவெண்பா மூன்று காண்டங்களை உடையது.
சுயம்வர காண்டம் - இக்காண்டம் முழுமையும், காதலும், இன்பமும், அழகியலும் விரவிக் கிடக்கின்றன. நளனும், தமயந்தியும் காதல் வசப்படுவதும், சுயம்வரத்தின் மூலம் தமயந்தி நளனைத் தன் கணவனாகத் தேர்ந்தெடுப்பதும் மிகச் சுவையாக விவரிக்கப்பட்டுள்ளன. நிடத நாட்டு வளமும் விதர்ப்ப தேசத்துச் சிறப்பும் அழகான உவமைகள் மூலம் எடுத்துச் சொல்லப்பட்டிருக்கின்றன. இது 168 வெண்பாக்களைக் கொண்டது.
கலிதொடர் காண்டம் - சுயம்வரத்தில், தமயந்தியால் நிராகரிக்கப்பட்ட கலி, சினங்கொண்டு, நளனையும், தமயந்தியையும் சதியால் பிரித்து தொடர் துன்பங்கள் விளைவிப்பதை விவரிக்கும் காண்டமாகும். இது 147 வெண்பாக்களைக் கொண்டது.
கலிநீங்கு காண்டம் - கலியின் தொல்லைகள் நீங்கி, நளனும் தமயந்தியும் இல்லறம் திரும்புதலை விவரிக்கும் காண்டமாகும். இது 89 வெண்பாக்களைக் கொண்டது.
சகுனியின் சூழ்ச்சியால், நாடு, நகரம், அனைத்தையும் இழந்து காட்டில் இருந்த தருமரின், கவலையைப் போக்கி நம்பிக்கை அளிக்கும் விதமாக, வியாசர் அவருக்கு நளனது கதையைச் சொல்வது போல் நளவெண்பா இயற்றப்பட்டுள்ளது.
நூலாசிரியர் - புகழேந்திப் புலவர்.
தமிழ் இலக்கிய உலகில், கம்பனுக்கு நிகரான, புலமையும், கற்பனைச்செறிவும் கொண்டவர் புகழேந்திப் புலவர். வெண்பாக்கள் பாடுவதில் வல்லவர். "வெண்பாவுக்கோர் புகழேந்தி" எனப் போற்றப்பட்டவர். ஒட்டக்கூத்தரின் சமகாலத்தவர். சோழன் பாண்டியன் மகளை மணந்தபோது, அறிவு திருத்தும் நல்லாசிரியராக சோழநாட்டுக்கு வந்தவர். குலோத்துங்கச்சோழனது வேண்டுகோளுக்கிணங்க நளவெண்பாவைப் பாடினார்.
இனி வரும் பதிவுகளில் ஒவ்வொரு வெண்பாவின் பொருளையும், சிறப்பையும் ஆராய்வோம்.
குறிப்பு:
"மதுரைத் திட்ட" த்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள நளவெண்பா மின்நூலினை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்ட பதிவு.
Saturday, March 8, 2008
மார்ச் 8 - உலக பெண்கள் தினம்.
மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு பதிவிட நேரமும் அவசியமும் வாய்த்திருக்கிறது.
மார்ச் 8 - உலக பெண்கள் தினம்.
கடந்த சில வருடங்களாகவே மேலை நாடுகளில் கொண்டாடப் படுவதைப் போல் புதிது புதிதாக பல தினங்களைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
இது ஒரு நல்ல விஷயம்தான். ஆனால் அம்மாதிரியான தினங்களில், தொலைக்காட்சிகளில் என்ன சிறப்புத் திரைப்படம் என்பதில் தான் அக்கறையோடிருக்கிறோமே தவிர அந்த நாளின் சிறப்பு என்ன ? வரலாறு என்ன ? என்பதையெல்லாம் நம்மில் பெரும்பன்மையோர் நினைத்துப் பார்க்கவோ அல்லது அறிந்து கொள்ளவோ முயல்வதில்லை.
மார்ச் 8 என்றால் சர்வதேச மகளிர் தினம் என்று நாமனைவரும் அறிவோம். ஆனால் எதற்காக மார்ச் எட்டாம் தேதியைக் குறிப்பாகத் தேர்ந்தெடுத்தார்கள் என்று தெரியுமா ?
சற்று வரலாறுகளில் பின்னோக்கித் தேடினால் வியப்பூட்டும் பல தகவல்கள் நமக்குக் கிடைக்கும்.
பெண்கள் போராடி பெண்களுக்கான சில உரிமைகளைப் பெற்றதுதான் மகளிர் தினம்.
1789ம் ஆண்டு ஜுன் 14ம் தேதி பிரஞ்சுப் புரட்சியின் போது, பாரிஸில் உள்ள பெண்கள் ஆண்களுக்கு நிகராக பெண்கள் உரிமை பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாரிஸில் ஆரம்பித்த இந்தப் போராட்டம் மெல்ல மெல்ல அனைத்து ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியது. அந்நாடுகளில் உள்ள பெண்கள் அனைவரும் உரிமைக்காக தொடர் போராட்டங்களை நடத்தினர். இறுதியில் ஆளும் வர்க்கம் அசைந்து கொடுத்தது.
பிரான்சில், இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க் எனும் அரசன், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும், பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். அந்த நாள் 1848 ஆம் ஆண்டு மார்ச் 8 ம் நாளாகும்! அந்த மார்ச் 8 ஆம் நாள் தான் மகளிர் தினம் உலகெங்கும் அமைய ஒரு வித்தாக அமைந்தது.
அதைத் தொடர்ந்து 1857 இல் நியூயார்க் நகரில் உழைக்கும் பெண்கள் கூடி குரல் எழுப்பினர். பெண்களின் முதல் குரல் ஒலிக்கத் தொடங்கியது பொன்னாள் அது! தொடர்ந்து போராட்டங்கள், பெண்கள் அமைப்புகள் தோன்றின.
1908 இல் வாக்குரிமை கேட்டுக் கொதித்து எழுந்தனர் அமெரிக்கப் பெண்கள். ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட்டே போராட்டத்தின் தாக்கம் கண்டு குலைந்து போனார். போராடினால் தான் உரிமைகள் கிடைக்கும் என்ற சிந்தனை உலகெங்கும் கிளர்ந்தெழுந்தது. அதன் விளைவு 1910 இல் ஹேகனில் சர்வதேச பெண்கள் மாநாடு கிளாரா தலைமையில் கூடியது.
அதன் தொடர்பாக சர்வதேச மகளிர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் 1911 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் தேதி ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்து கலந்து கொண்ட மகளிர் பிரதிநிதிகள் முதல் சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடினர்.
இந்தக் கூட்டத்தில் தான், அரசன் லூயிஸ் பிளாங்க் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புதல் அளித்த நாளான மார்ச் 8 ஐ நினைவு கூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் நாளை சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாட முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றினர்!
அன்று வாக்குரிமைக்காகப் போராடத் தொடங்கிய பெண்கள் இன்றுவரை தங்களின் உரிமைகளைப் பெறவும் பாதுகாக்கவும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றனர்.
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போம் என்ற
விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்.
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்.
என்ற மகாகவியின் வரிகள் இன்று நனவாகிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.
ஆயிரம் ஆண்டுகளாக மண்ணுக்குள் அழுத்தி வைக்கப்பட்ட நிலக்கரி வைரமாய் மின்னுவதைப் போல ஆண்டாண்டு காலமாய் அடிமைப்பட்டிருந்த பெண்ணினம் இன்று பல துறைகளிலும் வைரமாய் மின்னிக் கொண்டிருக்கின்றனர்.
இது நிச்சயமாக நாம் அனைவரும் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்ள வேண்டிய சாதனையாகும்.
அதேசமயம், கவலையளிக்ககூடிய ஒரு விஷயம், சமுதாயத்தில் சரிநிகர் உரிமையும், வெற்றியும் கண்ட பெண்கள், குடும்ப வாழ்வில் இன்னமும் அடக்குமுறைகளையும், பிரச்சனைகளையும் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். .
சமீபத்தில் படித்த ஒரு புள்ளிவிபரம், நம் நாட்டில்... 26 நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு பெண் அவமானப்படுத்தப் படுகிறாள்! 54 நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறாள். !
ஒவ்வொரு ஆண்டும் 15000 இளம் மனைவிகள் எரித்துக் கொல்லப்படுகின்றனர் என்கிறது இன்னொரு சர்வே.
இவ்வாறாக பெண்களுக்கான அடக்குமுறைகள் ஏதோ ஒருவகையில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
ஹேமா தேஷ்பாண்டே எனும் சமூகசேவகி, "எனக்கு எல்லா நாளுமே பெண்கள் தினம் தான்... ஒவ்வொருநாளும் நான் போராடவேண்டி உள்ளது, சவால்களை சந்திக்கவேண்டி இருக்கிறது" என்கின்றார்.
பண்டிகைகள், சுதந்திர தினம், குடியரசுதினம் என அந்தந்த தினங்களின் உயர்வைப் போற்றுகிறோம்; அந்த நாளிற்கான பின்னணியை நினைவு கொள்கிறோம்; அதைப் போலவேதான் இந்த மகளிர் தினமும்.
இதுபோன்ற தினங்களிலாவது பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளை ஒடுக்க நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
பெண்களுக்கு எதிரான பிரச்சனைகள் முடிவுக்கு வர வேண்டுமென்றால் ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம் என்ற நிலை ஏற்பட வேண்டும்.
கடந்த மகளிர் தினத்தில், தமிழீழத் தலைவர் பிரபாகரன் சொன்ன ஒரு கருத்தை இங்கே தருவது பொருத்தமானதாக இருக்கும் என நினைக்கிறேன்.
"பெண்ணிடமும் மனிதம் இருக்கின்றது! பாலியல் வேறுபாட்டிற்குப் புறம்பாக, ஆண்மைக்கும் பெண்மைக்கும் அப்பாலாக, இந்த மனிதத்தை இனம் கண்டு கௌரவிக்குமாறு, பெண்ணினம் ஆணினத்திடம் அன்புக்கரம் நீட்டுகின்றது. ஆழமான புரிந்துணர்வுடன் ஆணினம் இந்த அன்புக்கரத்தைப் பற்றிக் கொள்ளும்போதுதான் ஆண்-பெண் சமத்துவம் சாத்தியமாகும். "
ஆம்!! ஆண்-பெண் சமத்துவம், சமுதாயம், குடும்பம் என எல்லா தளங்களிலும் மலரும் போது, இந்த உலகம் நான்கு பக்கமும் நீரால் மட்டுமல்ல சந்தோசத்தாலும் சூழப்பட்டிருக்கும்.
இந்த நல்ல நாளில் நாம் அனைவரும் அந்த உன்னத நிலையை அடைய உறுதி கொள்வோமாக !!
பெண்மை வாழ்கென்று கூத்திடுவோமடா !!
பெண்மை வெல்கென்று கூத்திடுவோமடா !!
மார்ச் 8 - உலக பெண்கள் தினம்.
கடந்த சில வருடங்களாகவே மேலை நாடுகளில் கொண்டாடப் படுவதைப் போல் புதிது புதிதாக பல தினங்களைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
இது ஒரு நல்ல விஷயம்தான். ஆனால் அம்மாதிரியான தினங்களில், தொலைக்காட்சிகளில் என்ன சிறப்புத் திரைப்படம் என்பதில் தான் அக்கறையோடிருக்கிறோமே தவிர அந்த நாளின் சிறப்பு என்ன ? வரலாறு என்ன ? என்பதையெல்லாம் நம்மில் பெரும்பன்மையோர் நினைத்துப் பார்க்கவோ அல்லது அறிந்து கொள்ளவோ முயல்வதில்லை.
மார்ச் 8 என்றால் சர்வதேச மகளிர் தினம் என்று நாமனைவரும் அறிவோம். ஆனால் எதற்காக மார்ச் எட்டாம் தேதியைக் குறிப்பாகத் தேர்ந்தெடுத்தார்கள் என்று தெரியுமா ?
சற்று வரலாறுகளில் பின்னோக்கித் தேடினால் வியப்பூட்டும் பல தகவல்கள் நமக்குக் கிடைக்கும்.
பெண்கள் போராடி பெண்களுக்கான சில உரிமைகளைப் பெற்றதுதான் மகளிர் தினம்.
1789ம் ஆண்டு ஜுன் 14ம் தேதி பிரஞ்சுப் புரட்சியின் போது, பாரிஸில் உள்ள பெண்கள் ஆண்களுக்கு நிகராக பெண்கள் உரிமை பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாரிஸில் ஆரம்பித்த இந்தப் போராட்டம் மெல்ல மெல்ல அனைத்து ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியது. அந்நாடுகளில் உள்ள பெண்கள் அனைவரும் உரிமைக்காக தொடர் போராட்டங்களை நடத்தினர். இறுதியில் ஆளும் வர்க்கம் அசைந்து கொடுத்தது.
பிரான்சில், இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க் எனும் அரசன், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும், பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். அந்த நாள் 1848 ஆம் ஆண்டு மார்ச் 8 ம் நாளாகும்! அந்த மார்ச் 8 ஆம் நாள் தான் மகளிர் தினம் உலகெங்கும் அமைய ஒரு வித்தாக அமைந்தது.
அதைத் தொடர்ந்து 1857 இல் நியூயார்க் நகரில் உழைக்கும் பெண்கள் கூடி குரல் எழுப்பினர். பெண்களின் முதல் குரல் ஒலிக்கத் தொடங்கியது பொன்னாள் அது! தொடர்ந்து போராட்டங்கள், பெண்கள் அமைப்புகள் தோன்றின.
1908 இல் வாக்குரிமை கேட்டுக் கொதித்து எழுந்தனர் அமெரிக்கப் பெண்கள். ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட்டே போராட்டத்தின் தாக்கம் கண்டு குலைந்து போனார். போராடினால் தான் உரிமைகள் கிடைக்கும் என்ற சிந்தனை உலகெங்கும் கிளர்ந்தெழுந்தது. அதன் விளைவு 1910 இல் ஹேகனில் சர்வதேச பெண்கள் மாநாடு கிளாரா தலைமையில் கூடியது.
அதன் தொடர்பாக சர்வதேச மகளிர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் 1911 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் தேதி ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்து கலந்து கொண்ட மகளிர் பிரதிநிதிகள் முதல் சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடினர்.
இந்தக் கூட்டத்தில் தான், அரசன் லூயிஸ் பிளாங்க் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புதல் அளித்த நாளான மார்ச் 8 ஐ நினைவு கூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் நாளை சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாட முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றினர்!
அன்று வாக்குரிமைக்காகப் போராடத் தொடங்கிய பெண்கள் இன்றுவரை தங்களின் உரிமைகளைப் பெறவும் பாதுகாக்கவும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றனர்.
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போம் என்ற
விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்.
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்.
என்ற மகாகவியின் வரிகள் இன்று நனவாகிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.
ஆயிரம் ஆண்டுகளாக மண்ணுக்குள் அழுத்தி வைக்கப்பட்ட நிலக்கரி வைரமாய் மின்னுவதைப் போல ஆண்டாண்டு காலமாய் அடிமைப்பட்டிருந்த பெண்ணினம் இன்று பல துறைகளிலும் வைரமாய் மின்னிக் கொண்டிருக்கின்றனர்.
இது நிச்சயமாக நாம் அனைவரும் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்ள வேண்டிய சாதனையாகும்.
அதேசமயம், கவலையளிக்ககூடிய ஒரு விஷயம், சமுதாயத்தில் சரிநிகர் உரிமையும், வெற்றியும் கண்ட பெண்கள், குடும்ப வாழ்வில் இன்னமும் அடக்குமுறைகளையும், பிரச்சனைகளையும் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். .
சமீபத்தில் படித்த ஒரு புள்ளிவிபரம், நம் நாட்டில்... 26 நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு பெண் அவமானப்படுத்தப் படுகிறாள்! 54 நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறாள். !
ஒவ்வொரு ஆண்டும் 15000 இளம் மனைவிகள் எரித்துக் கொல்லப்படுகின்றனர் என்கிறது இன்னொரு சர்வே.
இவ்வாறாக பெண்களுக்கான அடக்குமுறைகள் ஏதோ ஒருவகையில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
ஹேமா தேஷ்பாண்டே எனும் சமூகசேவகி, "எனக்கு எல்லா நாளுமே பெண்கள் தினம் தான்... ஒவ்வொருநாளும் நான் போராடவேண்டி உள்ளது, சவால்களை சந்திக்கவேண்டி இருக்கிறது" என்கின்றார்.
பண்டிகைகள், சுதந்திர தினம், குடியரசுதினம் என அந்தந்த தினங்களின் உயர்வைப் போற்றுகிறோம்; அந்த நாளிற்கான பின்னணியை நினைவு கொள்கிறோம்; அதைப் போலவேதான் இந்த மகளிர் தினமும்.
இதுபோன்ற தினங்களிலாவது பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளை ஒடுக்க நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
பெண்களுக்கு எதிரான பிரச்சனைகள் முடிவுக்கு வர வேண்டுமென்றால் ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம் என்ற நிலை ஏற்பட வேண்டும்.
கடந்த மகளிர் தினத்தில், தமிழீழத் தலைவர் பிரபாகரன் சொன்ன ஒரு கருத்தை இங்கே தருவது பொருத்தமானதாக இருக்கும் என நினைக்கிறேன்.
"பெண்ணிடமும் மனிதம் இருக்கின்றது! பாலியல் வேறுபாட்டிற்குப் புறம்பாக, ஆண்மைக்கும் பெண்மைக்கும் அப்பாலாக, இந்த மனிதத்தை இனம் கண்டு கௌரவிக்குமாறு, பெண்ணினம் ஆணினத்திடம் அன்புக்கரம் நீட்டுகின்றது. ஆழமான புரிந்துணர்வுடன் ஆணினம் இந்த அன்புக்கரத்தைப் பற்றிக் கொள்ளும்போதுதான் ஆண்-பெண் சமத்துவம் சாத்தியமாகும். "
ஆம்!! ஆண்-பெண் சமத்துவம், சமுதாயம், குடும்பம் என எல்லா தளங்களிலும் மலரும் போது, இந்த உலகம் நான்கு பக்கமும் நீரால் மட்டுமல்ல சந்தோசத்தாலும் சூழப்பட்டிருக்கும்.
இந்த நல்ல நாளில் நாம் அனைவரும் அந்த உன்னத நிலையை அடைய உறுதி கொள்வோமாக !!
பெண்மை வாழ்கென்று கூத்திடுவோமடா !!
பெண்மை வெல்கென்று கூத்திடுவோமடா !!
Saturday, January 12, 2008
வரலாற்றுப் பிழைகள்
இந்தப் பதிவு திரைப்படங்களைப் பற்றியது.
வழக்கம் போலவே கேள்வியும், பதிலும் ...
பொழுதுபோக்கினைத் தவிர்த்து திரைப்படங்கள் நம் அன்றாட வாழ்வில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்த வல்லவையா ?
நிச்சயமாக !!
ப்ரான்ஸ்வா த்ரூபோ எனும் திரைப்பட மேதை, ''வாழ்க்கையை விட திரைப்படம் மேலானது'' என்கிறார்.
மகாத்மா காந்தியின் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது ''அரிச்சந்திரா'' நாடகமே.
காமராஜர், பக்தவச்சலம் போன்ற ஒரு சிலரைத் தவிர தமிழக முதல்வர் நாற்காலியை அலங்கரித்த அனைவருக்கும் திரைப்படப் பின்னணி இருக்கிறது.
இவை எல்லாற்றுக்கும் மேலாக, இன்னமும் நம் மக்களில் பெரும்பான்மையோர் திரைப்படங்களையும், திரைப்பட கதாபாத்திரங்களையும் தங்கள் வாழ்வின் பிம்பம் என்றே கருதுகின்றனர்.
ஆக திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமில்லாமல் அதையும் தாண்டி மக்களின் தனிப்பட்ட வாழ்வில் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு ஒரு வலிமையான சாதனமாக தங்களை நிரூபித்திருக்கின்றன.
இது மாற்றுக் கருத்தில்லாத உண்மை.
முதலில் இதிகாசங்களையும், புராணங்களையும் மட்டுமே கதைக்களங்களாக கொண்டிருந்த திரைப்படங்கள், நாளடைவில் சமுதாய அவலங்களையும், நாட்டு நடப்புகளையும் கருவாகக் கொள்ள ஆரம்பித்த போது, நிஜமாகவே சமூகத்தில் நல்ல அதிர்வுகளை உருவாக்கின.
ஆனால் இன்றைய நவீனகாலத் திரைப்படங்கள் மெல்ல மெல்ல தங்களின் அடையாளங்களை இழந்து வருவதாகத் தோன்றுகிறது.
அளவுக்கு மீறிய ஆபாசமும், வன்முறையும் மட்டுமே பிரதான கதைக்களங்களாக மாறிவிட்ட நிலையில், இன்னும் கூடுதலாக,
சில திரைப்படங்களில் நம் வரலாற்றையும், காவியங்களையும் திரித்து கேலிக்கூத்தாக்கும் அவலமும் நடக்கத்தான் செய்கிறது.
இந்தப் பதிவின் அடிப்படையே நண்பர் அபிராமி சுட்டிக்காட்டிய ஒரு திரைப்படக்காட்சியும், அதைத் தொடர்ந்து அவர் எழுப்பிய கேள்விகளும்தாம்.
பார்த்திபன் கனவு எனும் திரைப்படத்தில், வருகிற ஒரு நகைச்சுவைக் காட்சி.
நடிகர் விவேக், இயக்குநர் மனோபாலா இருவரும் மகனும் தந்தையுமாக நடித்திருப்பார்கள். படத்தில் மனோபாலா ஒரு ஆசிரியர். மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருக்கும்போது, ஒரு மாணவனிடம்
'' கண்ணகி மதுரையை எரித்தாள்; மதுரை கொழுந்துவிட்டு எரிந்தது. இது என்ன காலம் சொல்லு '' என்று வினவுவார்.
அப்போது குறுக்கிடும் விவேக்,
'' பாண்டியன் கோவலனைக் கொன்னது கண்ணகியோட பெர்சனல் மேட்டர், அதுக்கு ஏன் கண்ணகி மதுரையை எரிக்கணும் ? நீங்க இப்படி சொல்லிக் குடுக்கிறதாலதான் நாளைக்கு இவன் (மாணவனைப் பார்த்து) பெரிசானதும், ஏதாவது பிரச்சனைன்னா உடனே பஸ்ஸை எரிக்கிறான்'' என்பார்.
அதைக்கேட்ட மாணவனும் மனோபாலா தவறாக கற்றுக் கொடுப்பதாக சொல்லி, வகுப்பைவிட்டு வெளியேறுவதாக காட்சி அமைந்திருக்கும்.
இதை மேலோட்டமாகப் பார்த்தால், விவேக் பாணியிலமைந்த வழக்கமான, '' கருத்து '' சொல்வது போன்ற ஒரு நகைச்சுவைக்காட்சி தான்.. ஆனால் இதில் நெருடலான விசயம், கண்ணகி மதுரையை எரித்த நோக்கத்தையும், நிலையையும் திரித்துச் சொல்லியிருப்பது.
நண்பர் எழுப்பிய வினாக்கள் இவைகள்தாம்..
>> தமிழ்க் கலாச்சாரத்தின் அடையாளமாகச் சொல்லப்படுகிற கண்ணகியை, ஒரு சுயநலமிக்க மூன்றாம்தரப் பெண்ணாகச் சித்தரிப்பதா ?
>> நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் வன்முறையைத் தீர்வாக சொல்கிற காவியமா ?
>> கண்ணகி மதுரையை எரித்ததையும், தன் தலைவருக்குத் தரப்பட்ட நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மூன்று மாணவிகளைக் கொளுத்திய நிகழ்வையும் ஒரே பார்வையில் கொள்வதா ?
இந்த வினாக்கள் முற்றிலும் நியாயமானவை. கட்டாயம் விவாதிக்கப்பட வேண்டியவையும் கூட..
ஏனென்றால் ஒரு காவியத்தையோ, வரலாற்றினையோ முற்றிலும் புரிந்து கொள்ளாமல், விமர்சிப்பதோ, அதனை மக்கள் மேடைக்கு எடுத்து வருவதோ, மிகப்பெரிய தவறு.
அதிலும் திரைப்படங்களைப் போன்ற வலிமையான ஊடகங்களில் வரலாற்று நிகழ்வுகளைக் கையாளும்போது கூடுதல் கவனம் தேவை.
இந்த நகைச்சுவைக்காட்சியில் சித்தரிக்கப்படுவதைப் போல சொந்த நலத்திற்காகவா கண்ணகி சினம் கொண்டாள் ? இல்லை. மதுரையை எரித்த கண்ணகியின் கோபம் வேறுவகையானது.
பாரதி சொல்வானே,
பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா !!
மோதி மிதித்துவிடு பாப்பா !! - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா !! என்று.
அதைப்போல, தவறு செய்தவர்களைத் தண்டிக்க வேண்டும் என்ற நியாயமான கோபம் கண்ணகியினுடையது.
பூம்புகாரிலிருந்து மதுரைக்கு வந்த கண்ணகிக்கு பாண்டிய மன்னனாலேயே அநீதி இழைக்கப்பட்டது.
" மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி " எனும் மொழிக்கேற்ப தவறான நீதி சொன்ன மன்னன் ஆட்சி செய்யும் நகரமும் அநீதிகளின் உறைவிடமாகவே இருக்கும் என்பதாலேயே கண்ணகி மதுரையை எரிக்கத் துணிந்தாள்.
இன்னும் சொல்லப் போனால், மதுரையை எரித்திடுமாறு அக்னிக்கு ஆணையிடும்போதே யாரையெல்லாம் தவிர்த்திட வேண்டுமென்ற பட்டியலையும் சேர்த்தே தருகிறாள்.
சிலப்பதிகாரத்தில், மதுரைக்காண்டத்தில் வஞ்சின மாலையில் வருகிற அந்தப் பாடல் இதோ !! :
பார்ப்போர் அறவோர் பசுப்பத் தினிப்பெண்டிர்
மூத்தோர் குழவி யெனுமிவரைக் கைவிட்டுத்
தீத்திறத்தார் பக்கமே சேர்கென்று காய்த்திய
பொற்றொடி ஏவப் புகையழல் மண்டிற்றே
நற்றேரான் கூடல் நகர்.
பொருள் : அந்தணர், அறவழி தவறாதவர்கள், பசுக்கள், பத்தினிப் பெண்கள், வயது முதிர்ந்தவர்கள், குழந்தைகள் ஆகியோரை விட்டு விட்டுத் தீயவர்களை மட்டும் எரித்திடுக எனக் கோபம் கொண்டு கண்ணகி ஏவ, கூடல் நகராகிய மதுரையைப் புகை மண்டிற்று.
நம்முடைய எல்லா இலக்கியங்களும் நல்ல விசயங்களைத்தான் தாங்கியிருக்கின்றன. நாம் தான் அவற்றைச் சரியாக புரிந்து கொள்வதோ, பயன்படுத்துவதோ இல்லை.
இந்த காட்சி ஒரு சோற்றுப் பதம் மட்டுமே ! இதைப் போல இன்னும் எத்தனையோ ஊடகங்களில் வரலாற்றுப் பிழைகள் மிச்சமிருக்கின்றன !!
போனது போகட்டும் !!
இனிமேலாவது
>> படைப்பாளிகள் தங்களுக்குரிய சமூகப் பொறுப்பையுணர்ந்து, சரியான கருத்துக்களை மட்டுமே மக்கள் மன்றத்தில் வைக்க வேண்டும்.
>> நகைச்சுவையோ, பாடல் காட்சியோ அல்லது வேறு வசனங்களோ இதுபோன்ற வரலாற்று நிகழ்வுகளைக் குறிப்பதாயின், தணிக்கைக்குழு, அவற்றின் ஆதாரங்களைச் சரிபார்க்க வேண்டும்.
>> இது அவசியமானது - நாம் எந்த ஊடகத்திலேயாவது, ஏதாவது ஒருவகையில், நமது வரலாறோ, கலாச்சாரமோ, இலக்கியமோ, தவறாகச் சொல்லப்பட்டால் உடனடியாக குரலெழுப்ப வேண்டும்..
நினைவிருக்கட்டும் !! இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகப் பாதுகாத்து வைத்திருப்பதை, நமது தலைமுறையிலா தொலைப்பது ????
வழக்கம் போலவே கேள்வியும், பதிலும் ...
பொழுதுபோக்கினைத் தவிர்த்து திரைப்படங்கள் நம் அன்றாட வாழ்வில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்த வல்லவையா ?
நிச்சயமாக !!
ப்ரான்ஸ்வா த்ரூபோ எனும் திரைப்பட மேதை, ''வாழ்க்கையை விட திரைப்படம் மேலானது'' என்கிறார்.
மகாத்மா காந்தியின் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது ''அரிச்சந்திரா'' நாடகமே.
காமராஜர், பக்தவச்சலம் போன்ற ஒரு சிலரைத் தவிர தமிழக முதல்வர் நாற்காலியை அலங்கரித்த அனைவருக்கும் திரைப்படப் பின்னணி இருக்கிறது.
இவை எல்லாற்றுக்கும் மேலாக, இன்னமும் நம் மக்களில் பெரும்பான்மையோர் திரைப்படங்களையும், திரைப்பட கதாபாத்திரங்களையும் தங்கள் வாழ்வின் பிம்பம் என்றே கருதுகின்றனர்.
ஆக திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமில்லாமல் அதையும் தாண்டி மக்களின் தனிப்பட்ட வாழ்வில் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு ஒரு வலிமையான சாதனமாக தங்களை நிரூபித்திருக்கின்றன.
இது மாற்றுக் கருத்தில்லாத உண்மை.
முதலில் இதிகாசங்களையும், புராணங்களையும் மட்டுமே கதைக்களங்களாக கொண்டிருந்த திரைப்படங்கள், நாளடைவில் சமுதாய அவலங்களையும், நாட்டு நடப்புகளையும் கருவாகக் கொள்ள ஆரம்பித்த போது, நிஜமாகவே சமூகத்தில் நல்ல அதிர்வுகளை உருவாக்கின.
ஆனால் இன்றைய நவீனகாலத் திரைப்படங்கள் மெல்ல மெல்ல தங்களின் அடையாளங்களை இழந்து வருவதாகத் தோன்றுகிறது.
அளவுக்கு மீறிய ஆபாசமும், வன்முறையும் மட்டுமே பிரதான கதைக்களங்களாக மாறிவிட்ட நிலையில், இன்னும் கூடுதலாக,
சில திரைப்படங்களில் நம் வரலாற்றையும், காவியங்களையும் திரித்து கேலிக்கூத்தாக்கும் அவலமும் நடக்கத்தான் செய்கிறது.
இந்தப் பதிவின் அடிப்படையே நண்பர் அபிராமி சுட்டிக்காட்டிய ஒரு திரைப்படக்காட்சியும், அதைத் தொடர்ந்து அவர் எழுப்பிய கேள்விகளும்தாம்.
பார்த்திபன் கனவு எனும் திரைப்படத்தில், வருகிற ஒரு நகைச்சுவைக் காட்சி.
நடிகர் விவேக், இயக்குநர் மனோபாலா இருவரும் மகனும் தந்தையுமாக நடித்திருப்பார்கள். படத்தில் மனோபாலா ஒரு ஆசிரியர். மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருக்கும்போது, ஒரு மாணவனிடம்
'' கண்ணகி மதுரையை எரித்தாள்; மதுரை கொழுந்துவிட்டு எரிந்தது. இது என்ன காலம் சொல்லு '' என்று வினவுவார்.
அப்போது குறுக்கிடும் விவேக்,
'' பாண்டியன் கோவலனைக் கொன்னது கண்ணகியோட பெர்சனல் மேட்டர், அதுக்கு ஏன் கண்ணகி மதுரையை எரிக்கணும் ? நீங்க இப்படி சொல்லிக் குடுக்கிறதாலதான் நாளைக்கு இவன் (மாணவனைப் பார்த்து) பெரிசானதும், ஏதாவது பிரச்சனைன்னா உடனே பஸ்ஸை எரிக்கிறான்'' என்பார்.
அதைக்கேட்ட மாணவனும் மனோபாலா தவறாக கற்றுக் கொடுப்பதாக சொல்லி, வகுப்பைவிட்டு வெளியேறுவதாக காட்சி அமைந்திருக்கும்.
இதை மேலோட்டமாகப் பார்த்தால், விவேக் பாணியிலமைந்த வழக்கமான, '' கருத்து '' சொல்வது போன்ற ஒரு நகைச்சுவைக்காட்சி தான்.. ஆனால் இதில் நெருடலான விசயம், கண்ணகி மதுரையை எரித்த நோக்கத்தையும், நிலையையும் திரித்துச் சொல்லியிருப்பது.
நண்பர் எழுப்பிய வினாக்கள் இவைகள்தாம்..
>> தமிழ்க் கலாச்சாரத்தின் அடையாளமாகச் சொல்லப்படுகிற கண்ணகியை, ஒரு சுயநலமிக்க மூன்றாம்தரப் பெண்ணாகச் சித்தரிப்பதா ?
>> நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் வன்முறையைத் தீர்வாக சொல்கிற காவியமா ?
>> கண்ணகி மதுரையை எரித்ததையும், தன் தலைவருக்குத் தரப்பட்ட நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மூன்று மாணவிகளைக் கொளுத்திய நிகழ்வையும் ஒரே பார்வையில் கொள்வதா ?
இந்த வினாக்கள் முற்றிலும் நியாயமானவை. கட்டாயம் விவாதிக்கப்பட வேண்டியவையும் கூட..
ஏனென்றால் ஒரு காவியத்தையோ, வரலாற்றினையோ முற்றிலும் புரிந்து கொள்ளாமல், விமர்சிப்பதோ, அதனை மக்கள் மேடைக்கு எடுத்து வருவதோ, மிகப்பெரிய தவறு.
அதிலும் திரைப்படங்களைப் போன்ற வலிமையான ஊடகங்களில் வரலாற்று நிகழ்வுகளைக் கையாளும்போது கூடுதல் கவனம் தேவை.
இந்த நகைச்சுவைக்காட்சியில் சித்தரிக்கப்படுவதைப் போல சொந்த நலத்திற்காகவா கண்ணகி சினம் கொண்டாள் ? இல்லை. மதுரையை எரித்த கண்ணகியின் கோபம் வேறுவகையானது.
பாரதி சொல்வானே,
பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா !!
மோதி மிதித்துவிடு பாப்பா !! - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா !! என்று.
அதைப்போல, தவறு செய்தவர்களைத் தண்டிக்க வேண்டும் என்ற நியாயமான கோபம் கண்ணகியினுடையது.
பூம்புகாரிலிருந்து மதுரைக்கு வந்த கண்ணகிக்கு பாண்டிய மன்னனாலேயே அநீதி இழைக்கப்பட்டது.
" மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி " எனும் மொழிக்கேற்ப தவறான நீதி சொன்ன மன்னன் ஆட்சி செய்யும் நகரமும் அநீதிகளின் உறைவிடமாகவே இருக்கும் என்பதாலேயே கண்ணகி மதுரையை எரிக்கத் துணிந்தாள்.
இன்னும் சொல்லப் போனால், மதுரையை எரித்திடுமாறு அக்னிக்கு ஆணையிடும்போதே யாரையெல்லாம் தவிர்த்திட வேண்டுமென்ற பட்டியலையும் சேர்த்தே தருகிறாள்.
சிலப்பதிகாரத்தில், மதுரைக்காண்டத்தில் வஞ்சின மாலையில் வருகிற அந்தப் பாடல் இதோ !! :
பார்ப்போர் அறவோர் பசுப்பத் தினிப்பெண்டிர்
மூத்தோர் குழவி யெனுமிவரைக் கைவிட்டுத்
தீத்திறத்தார் பக்கமே சேர்கென்று காய்த்திய
பொற்றொடி ஏவப் புகையழல் மண்டிற்றே
நற்றேரான் கூடல் நகர்.
பொருள் : அந்தணர், அறவழி தவறாதவர்கள், பசுக்கள், பத்தினிப் பெண்கள், வயது முதிர்ந்தவர்கள், குழந்தைகள் ஆகியோரை விட்டு விட்டுத் தீயவர்களை மட்டும் எரித்திடுக எனக் கோபம் கொண்டு கண்ணகி ஏவ, கூடல் நகராகிய மதுரையைப் புகை மண்டிற்று.
நம்முடைய எல்லா இலக்கியங்களும் நல்ல விசயங்களைத்தான் தாங்கியிருக்கின்றன. நாம் தான் அவற்றைச் சரியாக புரிந்து கொள்வதோ, பயன்படுத்துவதோ இல்லை.
இந்த காட்சி ஒரு சோற்றுப் பதம் மட்டுமே ! இதைப் போல இன்னும் எத்தனையோ ஊடகங்களில் வரலாற்றுப் பிழைகள் மிச்சமிருக்கின்றன !!
போனது போகட்டும் !!
இனிமேலாவது
>> படைப்பாளிகள் தங்களுக்குரிய சமூகப் பொறுப்பையுணர்ந்து, சரியான கருத்துக்களை மட்டுமே மக்கள் மன்றத்தில் வைக்க வேண்டும்.
>> நகைச்சுவையோ, பாடல் காட்சியோ அல்லது வேறு வசனங்களோ இதுபோன்ற வரலாற்று நிகழ்வுகளைக் குறிப்பதாயின், தணிக்கைக்குழு, அவற்றின் ஆதாரங்களைச் சரிபார்க்க வேண்டும்.
>> இது அவசியமானது - நாம் எந்த ஊடகத்திலேயாவது, ஏதாவது ஒருவகையில், நமது வரலாறோ, கலாச்சாரமோ, இலக்கியமோ, தவறாகச் சொல்லப்பட்டால் உடனடியாக குரலெழுப்ப வேண்டும்..
நினைவிருக்கட்டும் !! இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகப் பாதுகாத்து வைத்திருப்பதை, நமது தலைமுறையிலா தொலைப்பது ????
Friday, January 4, 2008
பதினாறு பேறுகள் !!
உற்சாகமான கொண்டாட்டத்துடன் புத்தாண்டு பிறந்து விட்டது.
இந்த தடவை என்னுடைய புத்தாண்டுக் கொண்டாட்டம் லண்டனில்.
தேம்ஸ் நதிக்கரையின் ஓரத்தில், பிக் பென் கடிகாரம் பன்னிரண்டு அடித்ததும் வண்ண விளக்குகள் ஒளிர, பட்டாசுகள் வெடிக்க ஆரம்பித்த கொண்டாட்டம் விடியும்வரை நீண்டது. ஒரு புதிய அனுபவம்.
வழக்கம் போலவே புத்தாண்டு வாழ்த்துக்களுடன் கூடிய ஏராளமான மின்னஞ்சல்களை நண்பர்கள் அனுப்பியிருந்தனர்.
அதிலும் நண்பர் ஒருவர் கொஞ்சம் வித்தியாசமாக இந்தப் புத்தாண்டில் பதினாறு பேறுகளையும் பெற வேண்டுமென்று வாழ்த்தியதுடன் பதினாறு பேறுகளையும் வரிசைப்படுத்தியிருந்தார்.
நம்ம ஊர்த் திருமணங்களில் மணமக்களைப் '' பதினாறும் பெற்று வாழ்க '' என வாழ்த்துவதைக் கேட்டிருக்கிறேன்.
எனக்கு நீண்ட நாட்களாகவே ஒரு சந்தேகம் உண்டு. இந்த பதினாறு பேறுகள் என்பவை வழி வழியாகச் சொல்லப்படுவையா ? அல்லது நம் இலக்கியங்களில் இது பற்றிய அதிகாரப்பூர்வமான பட்டியல் ஏதேனும் உண்டா ? என்று .
நண்பருடைய மின்னஞ்சலின் உந்துதலால் இந்த சந்தேகம் மீண்டும் உயிர் பெற, நம் இலக்கியங்களை அலசத் தொடங்கினேன்.
சற்று தேடலுக்குப்பின் இந்தப் பாடல் கிடைத்தது.
கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்
கபடு வராத நட்பும்
குன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணி இலாத உடலும்
சலியாத மனமும், அன்பு அகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்,
தாழாத கீர்த்தியும், மாறாத வார்த்தையும்
தடைகள் வராத கொடையும்
தொலையாத நிதியமும், கோணாத கோலும், ஓர்
துன்பம் இல்லாத வாழ்வும்
துய்ய நின் பாதத்தில் அன்பும், உதவிப் பெரிய
தொண்டரொடு கூட்டுகண்டாய்
அலையாழி அறி துயிலும் மாயனது தங்கையே !
ஆதிக் கடவூரின் வாழ்வே !
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுக பாணி !
அருள்வாமி அபிராமியே !!
திருநாவுக்கரசர் திருக்கடவூரில் உறைந்திருக்கும் அபிராமி அன்னையின்மேல் பாடிய பதிகம் இது. இந்தத் திருக்கடவூர் மயிலாடுதுறையிலிருந்து 23 கி.மீ தொலைவில் உள்ளது. இங்குள்ள அமுதீசர் - அபிராமி அன்னை ஆலயம் மிகப் பிரசத்திப் பெற்றது. அமுதீசர் அருளால் மார்க்கண்டேயன் என்றும் பதினாறு வயதை பெற்றது இத்தலத்தில்தான். அபிராமி பட்டர் திருக்கடவூர் அபிராமி அன்னையின் மீது 100 பாடல்களைக் கொண்ட அந்தாதி பாடியுள்ளார். சரி, தலபுராணம் போதும். இனி பாடலைப் பார்க்கலாம்.
இந்தப்பாடலில் சொல்லப்பட்டிருக்கும் பதினாறு செல்வங்களையும் நான் புரிந்து கொண்டபடி இங்கே தருகிறேன்.
1 கற்றும் மறக்காத கல்வி
2 நீண்ட ஆயுள்
3 குறையாத இளமை
4 நோயில்லாத உடல்
5 வஞ்சனையில்லாத நட்பு.
6 சோர்வில்லாத மனம்
7 அன்புள்ள மனைவி
8 நல்ல சந்ததி (சந்தானம் - சந்ததி, பரம்பரை )
9 குறையாத புகழ்
10 உண்மை - சொல் தவறாமை
11 தடையில்லாத கொடை
12 செல்வம்
13 நீதி தவறாத குணம்
14 துன்பம் இலாத வாழ்வு.
15 மாறாத பக்தி
16 பெரியவர்களின் கூட்டு
என் நண்பர் அனுப்பியிருந்த பதினாறுக்கும், இந்தப் பட்டியலுக்கும் சில வேறுபாடுகள் உள்ளன. அவருடைய பட்டியலின் மூலம் எதுவென்று தெரியவில்லை. அறிந்ததும் வரும் பதிவுகளில் வெளியிடுகிறேன்.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!
( பின்னிணைப்பு :
பதினாறு பேறுகளில் ஒன்றாக சொல்லப்படும் '' அன்புள்ள மனைவி '' மற்ற எல்லாவற்றையும்விட முக்கியம் போலும். (அனுபவஸ்தர்கள் உறுதி செய்யவும் ;-) )
ஏனென்றால் இதே கருத்தை வலியுறுத்தும் மேலும் ஒரு பாடல். ஔவையார் பாடியது.
கொடிது கொடிது
கேட்கின் நெடுவடிவேலோய் !
கொடிது கொடிது
வறுமை கொடிது
அதனினும் கொடிது
இளமையில் வறுமை
அதனினும் கொடிது
ஆற்றொணாக் கொடுநோய்
அதனினும் கொடிது
அன்பிலாப் பெண்டிர்
அதனினும் கொடிது
இன்புற அவர்கை உண்பதுதானே !!
பொருள் - உலகத்திலேயே கொடியது அன்பில்லாத மனைவியின் கையால் தினமும் உண்பது தான்.
எத்தனை பேருக்கு இக்கொடுமை வாய்த்திருக்கிறதோ ?? :-))
இந்த தடவை என்னுடைய புத்தாண்டுக் கொண்டாட்டம் லண்டனில்.
தேம்ஸ் நதிக்கரையின் ஓரத்தில், பிக் பென் கடிகாரம் பன்னிரண்டு அடித்ததும் வண்ண விளக்குகள் ஒளிர, பட்டாசுகள் வெடிக்க ஆரம்பித்த கொண்டாட்டம் விடியும்வரை நீண்டது. ஒரு புதிய அனுபவம்.
வழக்கம் போலவே புத்தாண்டு வாழ்த்துக்களுடன் கூடிய ஏராளமான மின்னஞ்சல்களை நண்பர்கள் அனுப்பியிருந்தனர்.
அதிலும் நண்பர் ஒருவர் கொஞ்சம் வித்தியாசமாக இந்தப் புத்தாண்டில் பதினாறு பேறுகளையும் பெற வேண்டுமென்று வாழ்த்தியதுடன் பதினாறு பேறுகளையும் வரிசைப்படுத்தியிருந்தார்.
நம்ம ஊர்த் திருமணங்களில் மணமக்களைப் '' பதினாறும் பெற்று வாழ்க '' என வாழ்த்துவதைக் கேட்டிருக்கிறேன்.
எனக்கு நீண்ட நாட்களாகவே ஒரு சந்தேகம் உண்டு. இந்த பதினாறு பேறுகள் என்பவை வழி வழியாகச் சொல்லப்படுவையா ? அல்லது நம் இலக்கியங்களில் இது பற்றிய அதிகாரப்பூர்வமான பட்டியல் ஏதேனும் உண்டா ? என்று .
நண்பருடைய மின்னஞ்சலின் உந்துதலால் இந்த சந்தேகம் மீண்டும் உயிர் பெற, நம் இலக்கியங்களை அலசத் தொடங்கினேன்.
சற்று தேடலுக்குப்பின் இந்தப் பாடல் கிடைத்தது.
கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்
கபடு வராத நட்பும்
குன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணி இலாத உடலும்
சலியாத மனமும், அன்பு அகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்,
தாழாத கீர்த்தியும், மாறாத வார்த்தையும்
தடைகள் வராத கொடையும்
தொலையாத நிதியமும், கோணாத கோலும், ஓர்
துன்பம் இல்லாத வாழ்வும்
துய்ய நின் பாதத்தில் அன்பும், உதவிப் பெரிய
தொண்டரொடு கூட்டுகண்டாய்
அலையாழி அறி துயிலும் மாயனது தங்கையே !
ஆதிக் கடவூரின் வாழ்வே !
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுக பாணி !
அருள்வாமி அபிராமியே !!
திருநாவுக்கரசர் திருக்கடவூரில் உறைந்திருக்கும் அபிராமி அன்னையின்மேல் பாடிய பதிகம் இது. இந்தத் திருக்கடவூர் மயிலாடுதுறையிலிருந்து 23 கி.மீ தொலைவில் உள்ளது. இங்குள்ள அமுதீசர் - அபிராமி அன்னை ஆலயம் மிகப் பிரசத்திப் பெற்றது. அமுதீசர் அருளால் மார்க்கண்டேயன் என்றும் பதினாறு வயதை பெற்றது இத்தலத்தில்தான். அபிராமி பட்டர் திருக்கடவூர் அபிராமி அன்னையின் மீது 100 பாடல்களைக் கொண்ட அந்தாதி பாடியுள்ளார். சரி, தலபுராணம் போதும். இனி பாடலைப் பார்க்கலாம்.
இந்தப்பாடலில் சொல்லப்பட்டிருக்கும் பதினாறு செல்வங்களையும் நான் புரிந்து கொண்டபடி இங்கே தருகிறேன்.
1 கற்றும் மறக்காத கல்வி
2 நீண்ட ஆயுள்
3 குறையாத இளமை
4 நோயில்லாத உடல்
5 வஞ்சனையில்லாத நட்பு.
6 சோர்வில்லாத மனம்
7 அன்புள்ள மனைவி
8 நல்ல சந்ததி (சந்தானம் - சந்ததி, பரம்பரை )
9 குறையாத புகழ்
10 உண்மை - சொல் தவறாமை
11 தடையில்லாத கொடை
12 செல்வம்
13 நீதி தவறாத குணம்
14 துன்பம் இலாத வாழ்வு.
15 மாறாத பக்தி
16 பெரியவர்களின் கூட்டு
என் நண்பர் அனுப்பியிருந்த பதினாறுக்கும், இந்தப் பட்டியலுக்கும் சில வேறுபாடுகள் உள்ளன. அவருடைய பட்டியலின் மூலம் எதுவென்று தெரியவில்லை. அறிந்ததும் வரும் பதிவுகளில் வெளியிடுகிறேன்.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!
( பின்னிணைப்பு :
பதினாறு பேறுகளில் ஒன்றாக சொல்லப்படும் '' அன்புள்ள மனைவி '' மற்ற எல்லாவற்றையும்விட முக்கியம் போலும். (அனுபவஸ்தர்கள் உறுதி செய்யவும் ;-) )
ஏனென்றால் இதே கருத்தை வலியுறுத்தும் மேலும் ஒரு பாடல். ஔவையார் பாடியது.
கொடிது கொடிது
கேட்கின் நெடுவடிவேலோய் !
கொடிது கொடிது
வறுமை கொடிது
அதனினும் கொடிது
இளமையில் வறுமை
அதனினும் கொடிது
ஆற்றொணாக் கொடுநோய்
அதனினும் கொடிது
அன்பிலாப் பெண்டிர்
அதனினும் கொடிது
இன்புற அவர்கை உண்பதுதானே !!
பொருள் - உலகத்திலேயே கொடியது அன்பில்லாத மனைவியின் கையால் தினமும் உண்பது தான்.
எத்தனை பேருக்கு இக்கொடுமை வாய்த்திருக்கிறதோ ?? :-))
Subscribe to:
Posts (Atom)